தமிழ் சினிமாவில் அந்த காலத்தில் முன்னணி நடிகைகளாக வலம் வந்த பல நடிகைகளும் இளம் நடிகைகள் பலரது வருகை காரணமாக சினிமாவில் அவ்வளவாக நடிக்க வாய்ப்பு கிடைக்காத நிலையில் பலரும் சினிமாவுக்கு முழுக்கு போட்டு தங்களது குடும்ப வாழ்க்கையை கவனிக்கும் வகையில் திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வருகின்றனர். இந்நிலையில் தமிழில் பிரபல முன்னணி இயக்குனரும் நடிகருமான அமீர் நடிப்பில் வெளிவந்து மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்ற

திரைப்படமான யோகி படத்தின் மூலமாக மக்களிடையே மற்றும் திரையுலகில் தன்னை கதாநாயகியாக அடையாளபடுத்தி கொண்டவர் பிரபல முன்னணி நடிகை மதுமிதா. இந்த படத்தை தொடர்ந்து இங்க்லீஷ்காரன், தூங்கா நகரம் , பிரியாணி, போன்ற பல படங்களில் நடித்துள்ளார் அதோடு தமிழ் , தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளார் . இவ்வாறு பிரபலமாக படங்களில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களுக்கு

முன்னர் தன்னுடன் படங்களில் நடித்த சக நடிகரான சிவா  பாலாஜி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். திருமணத்திற்கு பின்னர் அவ்வளவாக படங்களில் நடிப்பதை தவிர்த்து தனது குடும்பத்தை கவனிப்பதில் கவனம் செலுத்தி வந்த நிலையில் இவர்களுக்கு இரு மகன்களும் உள்ளனர். இந்நிலையில் சமூகவலைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் மதுமிதா அடிக்கடி மாடர்ன்

உடையில் போடோஷூட் நடத்தி அந்த புகைப்படங்களை பதிவிட்டு வரும் நிலையில் சமீபத்தில் தனது கணவர் மற்றும் மகன்களுடன் ஒன்றாக எடுத்துக்கொண்ட புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் . அந்த புகைப்படத்தில் அவரை பார்த்த பலரும் அட மதுமிதாவா இது என்ன ஆளே அடையாளம் தெரியாமல் மாறிட்டாங்க என்றதோடு இவருக்கு இவ்வளவு பெரிய மகன்கள் இருக்கா என வாயடைத்து போயுள்ளனர் …………..