கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் பல முன்னணி சினிமா பிரபலங்களும் தொடர்ந்து திருமணம் செய்து கொண்டு செட்டில் ஆகி வரும் நிலையில் சமீபத்தில் பொன்னியின் செல்வன் படத்தின் இரண்டாம் பாகத்தின் ப்ரோமோசன் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட நிலையில் ரசிகர்கள் பலரும் அவரது திருமணம் குறித்து கேட்ட கேள்விகளுக்கு எந்த பதிலும் சொல்லாமல் வெறுமனே சிரித்தபடி சென்று விட்டார். இப்படி இருக்கையில் ஏறக்குறைய இருபது வருடங்களாக

சினிமாவில் ஹீரோயினாக நடித்து வரும் த்ரிஷா தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்களுடன் ஹீரோயினாக  நடித்து வரும் நிலையில் தற்போதும் சற்றும் இளமை குறையாமல் இருக்கும் நிலையில் தொடர்ந்து பல படங்களில் பிசியாக நடித்து வருகிறார் . இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் இவருக்கு கடந்த சில வருடங்களுக்கு முன்னர் அவரது வீட்டார் முன்னிலையில் திருமணம் செய்ய முடிவு செய்து அதன்படி நிச்சயம் வரை சென்ற

நிலையில் அதில் பாதியிலேயே நின்று போனது. இதற்கான காரணம் குறித்து சமீபத்தில் பேட்டி ஒன்றில் அவரது தாயார் பேசிய நிலையில் , அதில் வருணுடன் திருமணம் நிச்சயம் முடிந்தது குறித்து நிறைய விஷயங்கள் இருக்கிறது அதன் உண்மைகள் எங்களுக்கு தான் தெரியும். அதன்படி த்ரிஷா சினிமாவில் ஹீரோயினாக நடிப்பது தெரிந்து தான் பெண் பார்க்க வந்தார்கள் அதேபோல நிச்சயமும் செய்தார்கள் கல்யாணத்துக்கு பிறகும் நடிக்கலாம் என கூறினார்கள் வருணும் இதையே என்கரேஜ் செய்தார். இந்நிலையில் த்ரிஷாவின் நிச்சயம்

நின்றதில் நிறைய பெரும் புள்ளிகள் சம்பந்தம் இருக்கிறார்கள் அது இல்லாம இதில் பலரும் இன்வால்வ் ஆகி இருக்கிறார்கள். இப்படி இருக்கையில் இதை எல்லாம் அட்ஜஸ்ட் செய்து வாழ்வது எல்லாம் சரி வராது என்பதால் தான் நிச்சயத்தை பாதியிலேயே நிறுத்தி விட்டோம் . இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது…………..