கடந்த சில வருடங்களாக தென்னிந்திய திரையுலகில் தொடர்ந்து பல முன்னணி திரை பிரபலங்களும் தொடர்ந்து சினிமாவில் நடிப்பதை கடந்து குடும்ப வாழ்க்கையில் இணையும் விதமாக திருமணம் செய்து கொண்டு வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு பிரபல முன்னணி நடிகை ஒருவர் தனது இணைய பக்கத்தில் திருமணம் செய்து கொள்ள போவதாக பதிவிட்டுள்ளார். அந்த வகையில் தமிழ் சினிமாவில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் தனுஷ் நடிப்பில் வெளிவந்து மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான துள்ளுவதோ இளமை படத்தின் மூலமாக   திரையுலகில் தன்னை கதாநாயகியாக அறிமுகபடுத்தி

கொண்டவர் பிரபல நடிகை ஷெரின். தனது முதல் படத்திலேயே வசீகரமான தோற்றம்  மற்றும் நடிப்பால் பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்த நிலையில் அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக வலம் வருவார் என எண்ணிய நிலையில் ஒரு சில படங்களிலே நடித்த பின்னர்  அதன் பிறகு அவ்வளவாக வாய்ப்புக்கள் கிடைக்காததை அடுத்து சினிமாவில் இருந்து ஒதுங்கி இருந்தார். இதனைதொடர்ந்து மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பிரபல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான பிக்பாஸ் நிகழ்ச்சயின் மூன்றாவது சீசனில்

கலந்து கொண்டு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தை ஏற்படுத்தி கொண்டார். இதையடுத்து தற்போது முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சியான குக் வித் கோமாளி நிகழ்ச்சியில் போட்டியாளர்களில் ஒருவராக கலந்து கொண்டு அசத்தி வருகிறார். இந்நிலையில் சமூகவளைதலங்களில் எப்போதும் ஆக்டிவாக இருக்கும் அம்மிணி அடிக்கடி மாடர்ன் உடையில் போடோஷூட் நடத்தி அதனை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு அவரது ரசிகர்களை கிறங்கடித்து வருவதோடு அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கும் பதில் கொடுத்து வருகிறார். இப்படி ஒரு நிலையில் சமீபத்தில் ரசிகர்

ஒருவர் திருமணம் குறித்து கேட்ட நிலையில் , அதற்கு பதில் கொடுத்த ஷெரின் ஜாதகம் பார்த்ததில் இந்த வருட அக்டோபர் மாதத்தில் நடக்கும் என கூறியுள்ளார்கள் இதனால்  எனது திருமணத்தை சீக்கிரமாக பிளான் பண்ணி இருப்பதாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………..