தென்னிந்திய சினிமாவில் கடந்த சில வருடங்களாக தொடர்ந்து பல இன்னல்கள் அரங்கேறி வருவதோடு அதன் விளைவாக பல முன்னணி பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் காலமாகி நம்மை விட்டும் திரையுலகை விட்டும் மறைந்து வருகின்றனர். இப்படி ஒரு நிலையில் சமீபகாலமாக இந்த நிலை தொடர்ந்து அதிகரித்து வரும் நிலையில் தற்போது மேலும் ஒரு முன்னணி திரை பிரபலம் ஒருவர் கவலைக்கிடமான நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கபட்டு உள்ளார். இந்நிலையில் தமிழ்

சினிமாவில் 80-களின் காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோவாக மற்றும் குணசித்திர கதாபாத்திரங்களில் நடித்து தனது சிறப்பான நடிப்பின் மூலமாக திரையுலக பிரபலங்கள் உள்பட  பலரையும் தனது ரசிகர்களாக வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சரத் பாபு. இதையடுத்து தொடர்ந்து ஹீரோவாக நடித்ததை காட்டிலும் இவர் நண்பன், குணசித்திரம் என இது மாதிரியான மாறுபட்ட பல கேரக்டரில் பார்த்தது தான் அதிகம் எனலாம் . அதிலும் சூப்பர் ஸ்டார் ரஜினி

அவர்களின் வெற்றிப்படங்களில் ஒன்றான அண்ணாமலை படத்தில் வேற லெவலில் நடித்து அசத்தியிருப்பார். இவ்வாறு பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக  வயது மூப்பு காரணமாக படங்களில் ஏதும் நடிக்காமல் வீட்டிலேயே ஓய்வு எடுத்து வந்த நிலையில் சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல் நிலையில் குறைவு ஏற்பட்டு அவரை உடனடியாக மருத்துவமனையில் அனுமதிக்கபட்ட நிலையில அங்கு அவரை

பரிசோதித்த மருத்துவர்கள் அவருக்கு உடல் உறுப்புகளை பாதிக்கும் பெப்சிஸ் எனும்  நோயின் தாக்கம் அதிகமாக இருப்பதாக கூறியுள்ளார். இதையடுத்து அவருக்கு பலத்த சிகிச்சை பிரிவில் சிகிச்சை அளிக்கபட்டு வருவதோடு வென்டிலேட்டர் அறையில் இருந்து வரும் நிலையில் அவரது நிலையை கண்டு ஒட்டு மொத்த திரையுலகினரும் சோகத்தில் மூழ்கி உள்ளனர் . மேலும் அவரது ரசிகர்கள் பலரும் அவர் மீண்டும் நலமுடன் மீண்டு வர பிரார்த்தனைகளை செய்து வருகின்றனர்……………..