இன்றைக்கு தமிழ் சினிமாவில் மாறுபட்ட கதைகளை கொண்ட பல படங்கள் வெளியாகி மக்கள் ,மத்தியில் பலத்த வரவேற்பை பெற்று வரும் நிலையில் அந்த காலத்தில் வெளியான பல வெற்றிபடங்கள் இன்றளவும் மக்கள் மனதில் அழியாத நினைவுகளை கொண்டு இருப்பதோடு அதிகளவில் ரசித்து பார்க்கப்பட்டு வருகிறது. அப்படி ஒரு நிலையில் கடந்த  சில வருடங்களுக்கு முன்னர் பிரபல முன்னணி நடிகர் சரத்குமாரின் இரட்டை வேடத்தில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்ற திரைப்படம் நாட்டாமை. மேலும் சொல்லப்போனால் சரத்குமாரின் திரையுலக வாழ்க்கையில்

திருப்புமுனையாக அமைந்த படங்களில் இதுவும் ஒன்று எனலாம் இந்நிலையில் இந்த படத்தில் விஜயகுமார், மனோரமா, குஷ்பூ, மீனா, கவுண்டமணி, செந்தில் என பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்திருந்த நிலையில் இந்த படத்தில் ஒரு சில காட்சிகளிலேயே  நடித்த போதிலும் தனது வசீகரமான நடிப்பு மற்றும் தோற்றத்தால்  பல இளசுகளின் மனதை கொள்ளை கொண்டது மட்டுமின்றி இன்றைக்கும் பலரது கனவு கன்னியாக இருந்து வருபவர் நாட்டாமை படத்தில் டீச்சர் கதாபாத்திரத்தில்

நடித்த நடிகை ராணி . இவர் முதலில் ராமராஜன் நடிப்பில் வெளியான வில்லு பாட்டுக்காரன் படத்தின் மூலமாக திரையுலகிற்கு அறிமுகமானார் இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளதோடு ஜெமினி படத்தில் ஓ போடு பாடலுக்கு வேற லெவலில் நடனமாடி இருந்தார். இவ்வாறு பிரபலமாக தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக பட வாய்ப்புகள் ஏதும் கிடைக்காத நிலையில் சினிமாவில் இருந்து விலகி ஆளே இருக்கும் இடமே

தெரியாமல் இருந்து வந்தார். இந்நிலையில் தற்போது மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பிரபல முன்னணி தனியார் சேனலான ஜீ தமிழ் சேனலில் ஒளிபரப்பாகும் முன்னணி தொடரான சீதா ராமன் தொடரில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இதையடுத்து அந்த தொடரில் இவரை பார்த்த பலரும் நம்ம நாட்டாமை பட டீச்சரா இது என வாயைபிளந்து பார்த்து வருகின்றனர் ……………..