தென்னிந்திய சினிமாவில் முன்னணி நடிகைகள் மத்தியில் தொடர்ந்து பல வருடங்களாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோயினாக நடித்து வருவதோடு தனக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் அடையாளத்தையும் தக்க வைத்து கொண்டிருப்பவர் பிரபல முன்னணி நடிகை தமன்னா. இந்நிலையில் தமிழ், தெலுங்கு, ஹிந்தி, கன்னடம் என பல மொழிப்படங்களில் பிசியாக நடித்து வந்த நிலையில் கடந்த சில வருடங்களாக இவருக்கு பட வாய்ப்புகள் குறைய தொடங்கியதை அடுத்து சில காலம் சினிமா பக்கம் வராமல் இருந்த தமன்னா

தற்போது மீண்டும் மவுசு தொடங்கிய நிலையில் பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் தற்போது தமன்னா தனது இணைய பக்கத்தில் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார் . அதில் தனது காதலை வெளிப்படையாக கூறியுள்ளார் அந்த வகையில் பிரபல பாலிவுட் நடிகர் விஜய் வர்மா உடன் கடந்த சில மாதங்களாக தமன்னா அடிக்கடி வெளியில் சுற்றி வந்ததோடு இருவரும் நெருக்கமாக இருந்து வந்ததை அடுத்து இருவரும் காதலித்து வருவதாக பல தகவல்கள் இணையத்தில் பரவி வந்தது. மேலும் இதுகுறித்து பேசிய தமன்னா தாங்கள் இருவரும் கடந்த சில

மாதங்களுக்கு முன்னர் லஸ்ட் ஸ்டோரிஸ் 2 படத்தில் நடித்த போது இருவருக்கும் இடையில் நெருக்கம் ஏற்பட்டு அது பின்னாளில் காதலாக மாறியதாக கூறியுள்ளார். இதையடுத்து விளக்கம் கொடுத்த ஒருவர் கோ ஸ்டார் ஆக இருப்பதால் மட்டும் காதல் வந்துவிடாது நான் பல கோ ஸ்டார்களை பார்த்திருக்கிறேன். ஒருவர் மீது ஈர்ப்பு வருவது பர்சனல் விசயம் இப்படிப்பட்ட ஒருவரை தான் நான் பார்த்திருக்கிறேன் அவருடன் இந்த உறவு இயற்கையாகவே அவர் மீது எனக்கு ஈர்ப்பு வந்தது.

மேலும் ஒரு ரிலேசன்ஷிப்பில் இருக்கவேண்டும் என்றால் அவருக்காக நம்மை மாற்றிக்கொள்ள வேண்டும் எனும் நிலைதான் இந்தியாவில் இருக்கிறது. இருப்பினும் எனக்கு இவருடன் இருக்கும் போது நான் உருவாக்கிய உலகத்தில் எந்த மாற்றமும் இல்லாத அளவிற்கு அவர் என்னை பார்த்துக்கொண்டார். அவர் மீது எனக்கு அதிக அக்கறை உள்ளது தற்போது நான் முன்பை விட அதிகளவில் மகிழ்ச்சியாக இருக்கிறேன் என கூறியுள்ளார் ………………