தற்போது உள்ள காலகட்டத்தில் சினிமாவில் வெளியாகும் படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது எனலாம். இப்படி ஒரு நிலையில் பிரபல முன்னணி சேனலான விஜய் டிவியில் வெளியாகும் நிகழ்ச்சிகளுக்கு என்றே தனி ரசிகர் பட்டாளமே உள்ளது எனலாம் . இவ்வாறான நிலையில் இந்த சேனலில் ஒளிபரப்பாகும் நிகழ்ச்சிகள் எந்த அளவிற்கு பிரபலமோ

அதே போல் அந்த நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கும் தொகுப்பாளர்களும் வெகு பிரபலமாக உள்ளார்கள் எனலாம் . இதையடுத்து பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருவதோடு தனது நகைச்சுவையான பேச்சு மற்றும் நடிப்பால் பலரையும் தனது ரசிகர்களாக  வைத்திருப்பவர் பிரபல முன்னணி தொகுப்பாளினி பிரியங்கா தேஷ்பாண்டே. இவர் விஜய் டிவியில் சூப்பர் சிங்கர்,

ஸ்டார்ட் மியூசிக் போன்ற பல முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வரும் நிலையில் சமீபத்தில் இவர் மர்ம நபர்களால் கடத்தப்பட்டு இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் சின்னதிரையினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. இதையடுத்து இது குறித்து விளக்கம் கேட்டபோது, தற்போது பிரியங்கா ஸ்டார்ட் மியூசிக் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி வரும் நிலையில் அந்த நிகழ்ச்சியின் செட்டில்

இருந்து அவர் கடத்தப்பட்டு இருப்பதாக வீடியோ ஒன்று இணையத்தில் வெளியாகி உள்ள நிலையில் அந்த நிகழ்ச்சியின் ப்ரோமோவுக்காக இவ்வாறாக செய்துள்ளதாக தெரிய வந்துள்ளது. மேலும் இந்த வாரம் ஸ்டார்ட் மியூசிக்கில் போட்டியாளர்களாக யார் கலந்து கொள்ளபோகிறார்கள் என தெரியாத நிலையில் மக்கள் மத்தியில் பலத்த எதிர்பார்ப்பு உள்ளது எனலாம்…………….