தமிழ் சினிமாவில் தற்போது இளம் நடிகர்கள் பலரும் படங்களில் ஹீரோவாக நடித்து வரும் நிலையில் நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களின் நடிப்பின் மூலமாக  பலரது கவனத்தை வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் சின்னத்திரையின் மூலமாக திரையுலகில் அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில்

முன்னணி நடிகராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் சிவகார்த்திகேயன். இதையடுத்து தொடர்ந்து இவரது நடிப்பில் படங்கள் வெளியாகி வரும் நிலையில் சமீபகாலமாக வெளிவந்த படங்கள் அனைத்தும் மக்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை பெற்று இருந்தது. இப்படி இருக்கையில் சிவகார்த்திகேயன் தற்போது மாவீரன் படத்தில் நடித்து வருகிறார்

இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் முடிந்த நிலையில் இந்த படம் விரைவில் திரையில் வெளியாகவுள்ளது. இவ்வாறு இருக்கையில் சிவாகர்த்திகேயன் இந்த படத்தின் ப்ரோமோசன் வேலைகளில் பிசியாக இருந்து வரும் நிலையில் கடந்த சில மாதங்களாக இதுவரை இல்லாமல் தலையில் குல்லாவுடன் சுற்றி வருகிறார். இது குறித்து அவரிடம் விளக்கம் கேட்டபோது, அவர் கூறுகையில் தனது அடுத்த படமான ஏஸ் கே 21 படத்தின் கெட்டப் சம்பந்தமாக

இருப்பதாகவும் அதனை வெளியில் காட்டாமல் இருக்க வேண்டும் என இயக்குனர் கூறியதை அடுத்து குல்லாவுடன் சுற்றி வருவதாக கூறியுள்ளார். மேலும் எவ்வளவு வெயில் அடிச்சாலும் இந்த குல்லாவோடு சுற்ற வேண்டி இருக்கு என காமெடியாக கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் செம வைரளாகி வருகிறது……………….