கடந்த சில மாதங்களாக மக்கள் மற்றும் திரையுலகில் பெரிதளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வுகளுள் ஒன்று பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தின் வருக்கைக்காக தான். இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு காஷ்மீரில் நடந்த நிலையில் இதில் கவுதம் மேனன் , அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் , மிஸ்கின், மேத்யு, த்ரிஷா என பல முன்னணி திரை பிரபலங்கள் பலரும் இந்த

படத்தில் நடித்து வரும் நிலையில் இந்த படத்திற்கு மக்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பு இருந்து வருகிறது. இதனைதொடர்ந்து இந்த படத்தின் படபிடிப்பு வேலைகள் ஓரளவு முடிந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் 19-ம் தேதி திரையில்  வெளியாகவுள்ள படக்குழுவினர் தகவல்கள் தெரிவித்து உள்ளனர். இதற்கிடையில் இந்த படத்தின் அப்டேட்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கும் நிலையில் தளபதி விஜய்

அடுத்ததாக சினிமாவில் நடிப்பதை தாண்டி அரசியல் பக்கம் கவனம் செலுத்தி வரும் நிலையில் இந்த படத்திற்கு பிறகு தளபதி விஜய் சில காலம் சினிமாவில் நடிக்க போவதில்லை என கூறியதாக பல தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது . இப்படி ஒரு நிலையில் லியோ படத்தின் இசை வெளியீட்டு விழா விரைவில் நடக்க இருப்பதாகவும் இந்த முறை மதுரையில் மிக பிரமாண்டமாக

நடக்க இருப்பதாகவும் இதில் சுமார் ஐம்பது ஆயிரத்துக்கும் மேலான ரசிகர்கள்  கலந்து கொள்ள இருப்பதாகவும் கூறியுள்ளனர். மேலும் வழக்கம் போல் தளபதி இந்த  முறையும் குட்டி கதை ஒன்றை கூறுவார் என பலரும் எதிர்பார்க்கும் வகையில் அதோடு அரசியல் மீதான பல கருத்துகளை கூற இருப்பதாக அவரது ரசிகர்கள் பலரும் பல விதமான கருத்துகளை தெரிவித்து வருகின்றனர்………………………