தமிழ் சினிமாவில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகர்கள் படங்களில் ஹீரோவாக அறிமுகமாகி நடித்து வருகின்றனர் அதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக தங்களது நடிப்பு திறமையின் மூலமாக பலரது மனதை கவர்ந்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வருகின்றனர் . இப்படி ஒரு நிலையில் அந்த காலத்தில் சினிமாவில் நடித்த பல முன்னணி நடிகர்கள் தற்போது படங்களில் நடிக்கவில்லை என்றாலும் மக்கள் மத்தியில் பலத்த பிரபலமாக இருந்து வருவதோடு தங்களுக்கென

தனி ரசிகர்  பட்டாளத்தை இன்றளவும் வைத்துள்ளனர் எனலாம். அந்த வகையில் 90-களின் காலகட்டத்தில் பல படங்களில் ஹீரோவாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது கவனத்தை தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர் பிரபல முன்னணி நடிகர் அப்பாஸ். இதையடுத்து தொடர்ந்து பல படங்களில் நடித்து வந்த நிலையில் தற்போதும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து வருகின்றார்.

இந்நிலையில் சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட அப்பாஸ் பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார் இதனைதொடர்ந்து அவர் பத்தாம் வகுப்பு படிக்கும் போது அந்த தேர்வில் தோல்வியை தழுவியதை அடுத்து எனது காதலியும் பிரேக்கப் செய்து விட்டார். இதனால் மிகுந்த மன வேதனையுடன் விபரீத முடிவு எடுக்க எண்ணி எதிரில் வந்த வாகனத்தில் விழ முயற்சித்தேன் ஆனால் என்னால் அவருக்கும் எதாவது ஆகிவிடும் என எண்ணி

அதை செய்யாமல் விட்டு விட்டேன். இதன் பின்னர் ஒரு சில படங்களுக்கு பின்னர் எனது சினிமா வாழ்க்கையும் வெறுப்பை ஏற்படுத்திய நிலையில் எனது குடும்பத்துடன் நியுசிலாந்தில் சென்று செட்டில் ஆகி விட்டேன் என கூறியுள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது…………………