இன்றைக்கு சினிமாவில் ஹீரோவாக பல துறைகளை சேர்ந்த பிரபலங்களும் அறிமுகமாகி நடித்து வருவதோடு வெகுவாக தங்களது நடிப்பு திறமையின் மூலமாக பலரது கவனத்தையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைப்பதோடு தங்களுக்கென தனி ரசிகர் பட்டாளத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். அந்த வகையில் தமிழ் சினிமாவில் பல முன்னணி நடிகர்களின் படங்களுக்கு இசையமைப்பாளராக இருந்து பல வெற்றி பாடல்களை பாடி மக்கள் மற்றும் திரையுலகில் முன்னணி

இசையமைப்பளர்களில் ஒருவராக வலம் வந்த விஜய் ஆண்டனி அவர்கள் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் நான் படத்தின் மூலமாக திரையுலகில் ஹீரோவாக அறிமுகமானார். நடித்த முதல் படத்திலேயே பலத்த பிரபலத்தை பெற்ற நிலையில் தற்போது அடுத்தடுத்து பல முன்னணி நடிகர்களின் படங்களில் ஹீரோவாக நடித்து வருவதோடு முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருகிறார். இந்நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் பிச்சைக்காரன் படத்தின் இரண்டாவது பாகம் திரையில் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது . இவ்வாறு

பிரபலமாக இருக்கும் நிலையில் விஜய் ஆண்டனி சமீபத்தில் கலந்து கொண்ட பேட்டி ஒன்றில் தனது காதல் திருமணம் குறித்த பல சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். இதையடுத்து அவர் கூறுகையில் சுக்ரன் படத்தின் போது பாத்திமா எனக்கு போன் செய்து பாராட்டினார் பின்னர் நான் அவரை எனது வீட்டிற்கு வருமாறு அழைத்தேன். அந்த சமயம் அவர் சண் தொலைக்காட்சியில் பிரபல விஜேவாக இருந்தார் . அதோடு அவர் எனது அம்மாவிடம் நடந்துகொண்ட விதம் மற்றும் எளிமையாக நடந்து கொண்டார் இதனைதொடர்ந்து

அவர் மீது எனக்கு காதல் வந்தது . இதனையடுத்து அவர் வீட்டிற்கு சென்ற நிலையில் அவரிடம் உங்களுக்கு மாப்பிள்ளை பார்ப்பதாக இருந்தால் அதில் எனது பெயரையும் சேர்ந்து கொள்ளுங்கள் என கூறினார். உடணே  அவர் சிரித்தார் இதிலிருந்து அவரும் என்னை காதலிக்கிறார் என புரிந்து கொண்டேன் என சிரித்தபடி கூறியிருந்தார். இந்நிலையில் தற்போது இந்த தகவல்கள் மற்றும் அவரது மனைவியின் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் வைரளாகி வருகிறது…………………