தற்போது உள்ள காலகட்டத்தில் மக்கள் மத்தியில் சினிமாவில் வெளிவரும்  படங்களை காட்டிலும் சின்னத்திரையில் ஒளிபரப்பாகும் தொடர்களும் ரியாலிட்டி நிகழ்ச்சிகளும் தான் அதிகளவில் பிரபலமாக இருந்து வருகிறது. இப்படி ஒரு நிலையில் முன்னணி ரியாலிட்டி நிகழ்ச்சிகளில் ஒன்றான குக் வித் கோமாளி நிகழ்ச்சி சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலரது கவனத்தையும் வெகுவாக கவர்ந்து உள்ள நிலையில் தற்போது அந்த நிகழ்ச்சியின் நான்காவது சீசன்

வெற்றிகரமாக அதன் இறுதி வாரத்தை எட்டியுள்ளது. இந்நிலையில் இறுதி கட்ட போட்டியாளர்களாக சிவாங்கி, மைம் கோபி, கிரண், விசித்திரா, ஸ்ருஷ்டி, ஆண்டி போன்றோர் உள்ள நிலையில் இந்த முறை டைட்டில் வின்னராக மைம் கோபி தேர்வாகி உள்ளார் கடந்த சீசன்களில் பெண்களே டைட்டில் வின்னராக இருந்து வந்ததை அடுத்து இந்த முறை ஆண்களில் ஒருவராக இவர்  தேர்வாகியுள்ளார்

அதேபோல் இரண்டாவது இடத்தை ஸ்ருஷ்டி மற்றும் மூன்றாவது இடத்தை விசித்திரா பிடித்துள்ள நிலையில் மேலும் இந்த சீசனில் கலந்து கொண்ட பிரபலங்கள் வாங்கிய சம்பளம் குறித்த தகவல்கள் அண்மையில் இணையத்தில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் சிவாங்கி 20  ஆயிரம், விஜே விஷால் 25 ஆயிரம்,

ராஜ் அய்யப்பா 26  ஆயிரம் , விசித்திரா 30 ஆயிரம் , ஷெரின் 35ஆயிரம் , ஸ்ருஷ்டி , ஆண்டி 30 ஆயிரம் , மைம் கோபி 40-50 ஆயிரம் வரை ஒரு எபிசோடுக்கு வாங்குவதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. இதையடுத்து இந்த தகவலை பார்த்த பலரும் வாயடைத்து போயுள்ளனர் ……………….