தென்னிந்திய சினிமாவில் தற்போது பரவலாக எதிர்பார்க்கப்பட்டு வரும் படங்களில் ஒன்று பிரபல முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் மிக பிரமாண்டமாக உருவாகி வரும் லியோ படம் தான் . இந்நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்புகள் காஷ்மீரில் நடந்த நிலையில் இந்த படத்தில் மிஸ்கின், மேத்யு, அர்ஜுன், சஞ்சய் தத், மன்சூர் அலிகான் , த்ரிஷா என பல முன்னணி பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் படத்தின் இறுதி கட்ட படபிடிப்புகள்

சென்னையில் முடிந்த நிலையில் வரும் அக்டோபர் மாதம் படம் திரையில் வெளியகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது. இவ்வாறு இருக்கையில் தொடக்கத்தில் லியோ படம் குறித்த பல அப்டேட்களை படக்குழு அறிவித்து வரும் நிலையில் இந்த படம் குறித்த எந்தவொரு காட்சியும் தகவலும் எளிதில் வெளியாகாமல் பார்த்து வருகின்றனர் . இப்படி இருக்கையில் சமீபத்தில் இந்த படத்தின் ஒன் லைன் ஸ்டோரி

இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் லியோ படத்தில் தளபதி விஜய் மற்றும் த்ரிஷா இருவரும் கணவன் மனைவியாக தனது மகளுடன்  காபி கடை ஒன்றை வைத்து நடத்தி வரும் நிலையில் அங்கிருக்கும் மாபியா கும்பலுடன் விஜய்க்கு மோதல் ஏற்பட இந்த சண்டை பெரிதளவில் நடக்க இதன் காரணமாக இவரது முன்னாள் எதிரிகள்

பலருக்கும் இவர் இருக்கும் இடம் தெரிய வருகிறது அதோடு இவரது பிளாஷ்பேக் கதை வருவதாக தெரிய வருகிறது. இந்நிலையில் இந்த கதை தான் லியோ படத்தின் கதையா என  தெரியாத நிலையில் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பலத்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது எனலாம்………………