தற்போது தென்னிந்திய சினிமாவில் தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பல பிரமாண்டமான திரைப்படம் உருவாகி வருவதோடு மக்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி வருகிறது. அந்த வகையில் தமிழ் சினிமாவில் தொடர்ந்து பல வருடங்களாக முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருவதோடு தனக்கென உலகளவில் தனி ரசிகர் பட்டாளமே வைத்திருப்பவர் பிரபல முன்னணி நடிகர் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த். இந்நிலையில் இவரது நடிப்பில் பிரபல முன்னணி

இயக்குனர் நெல்சன் இயக்கத்தில் ஜெயிலர் படம் தயாராகி  வரும் நிலையில் இன்னும் சில தினங்களில் திரையில் வெளியாகவுள்ளது. இதனைதொடர்ந்து இந்த படத்தில் காஜல் அகர்வால், ரம்யா கிருஷ்ணன், வசந்த ரவி, மோகன்லால், மிரானா, யோகி பாபு, சிவராஜ்குமார் , விநாயகன் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்கள் படத்தில் நடித்துள்ளனர் மேலும் இந்த படத்திற்கு அனிருத் இசையமைத்துள்ளார்.

இதையடுத்து இந்த படத்தின் டிக்கெட் புக்கிங் தொடங்கிய சில மணி  நேரத்திலேயே அணைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்து விட்டதாக தகவல்கள் வெளியாகி வருகிறது. இவ்வாறு இருக்கையில் தற்போது இந்த படத்தில் நடிக்க ரஜினி வாங்கியுள்ள சம்பளம் குறித்த தகவல்கள் இணையத்தில் வெளியாகி அனைவரையும் வாயை பிளக்க செய்துள்ளது. காரணம் ரஜினி இந்த படத்தில்

டைகர் முத்துவேல் பாண்டியன் கதாபாத்திரத்தில் நடிப்பதற்கு சம்பளமாக சுமார் 100 கோடி வாங்கியுள்ளதாக தகவல்கள் வெளியாகி பெரும் சர்ச்சையை கிளப்பி வருகிறது. இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து பலரும் பலவிதமான கருத்துகளை கொட்டி தீர்த்து வருகின்றனர்………………………..