தற்போது மக்கள் மத்தியில் பெரிதளவில் எதிர்பார்ப்புடன் பரபரப்பாக பேசப்பட்டு வருவது பிரபல  முன்னணி இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் தளபதி விஜய் நடிப்பில் உருவாகி வரும் லியோ படம் குறித்து தான். இந்த படத்தில் மன்சூர் அலிகான், மிஸ்கின், சஞ்சய் தத், அர்ஜுன் , மேத்யு, த்ரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரை பிரபலங்கள் நடித்து வரும் நிலையில் இந்த படத்தின் முதற்கட்ட படபிடிப்பு

காஷ்மீரில் நடந்ததை அடுத்து அடுத்த கட்ட படபிடிப்புகள் சென்னையில் மிக பிரமாண்டமாக செட் அமைத்து நடந்தது. இதையடுத்து இந்த படத்தின் பட வேலைகள் ஓரளவு முடிந்த நிலையில் இந்த படம் இன்னும் சில மாதங்களில் திரையில் வெளியாகவுள்ளது. இதற்கிடையில் படக்குழுவினர் லியோ படம் குறித்த பல அப்டேட்களை தொடர்ந்து வெளியீட்டு ரசிகர்களை வியப்பில்

ஆழ்த்தி வருகின்றனர். அந்த வகையில் தற்போது புது அப்டேட் ஒன்று வெளியாகி பலரையும் வாயடைக்க செய்துள்ளது. அந்த வகையில் சுமார் 250 முதல் 300 கோடி வரை பட்ஜெட்டில் வெளியாகும் இந்த படம் இரண்டு பாகங்களாக வெளியாக இருப்பதாக கூறப்படுகிறது. இரண்டாவது பாகத்தை 2025-2026 வெளியீட படக்குழுவினர் திட்டமிட்டுள்ளதாக கூறபடும்

நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும்  தளபதி விஜயின் திரையுலக வாழ்க்கையில் இரண்டு பாகங்களாக ஒரு படம் வெளியாவது இதுவே முதல் முறையாகம் எனவும் கூறப்படுகிறது………………………