கடந்த சில தினங்களாக மக்கள் மத்தியில் அதிகளவில் பரபரப்பாக பேசப்பட்டு வரும் நிகழ்வு என்றால் அது சமீபத்தில் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் வெளியாகி உள்ள ஜெயிலர் திரைப்படம் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்றுள்ளது. இந்த படம் வெளியாவதற்கு முன்பே அதிக எதிர்பார்ப்புகளை பெற்றிருந்தது இதற்கு முக்கிய காரணம் இத்திரைப்படத்தின் இயக்குனர் நெல்சன் திலிப் குமார் இயக்கத்தில் தளபதி விஜய், பூஜா ஹெக்டே, TTV

கணேஷ் ஆகியோர் நடிப்பில் வெளியான பீஸ்ட் திரைப்படம் விஜய் ரசிகர்களின் எதிர்பார்ப்பை பூர்த்தி செய்ய வில்லை. அது மட்டுமன்றி பலராலும் மிக மோசமான முறையில் விமர்சிக்கப்பட்டது . இவ்வாறு இருக்கையில் இந்த படத்தை தொடர்ந்து அடுத்த படமாக சூப்பர் ஸ்டார்  ரஜினியை வைத்து ஜெயிலர் படத்தை இயக்க எண்ணியதை அடுத்து எனவே இந்த திரைப்படம் நெல்சன் அவர்களுக்கு

ஒரு கம்பேக் திரைப்படமாக தான் கருதப்பட்டது இத்திரைப்படத்தை விஜய் ரசிகர்கள் தான் அதிக எதிர்ப்புகளை கொண்டிருந்தனர். இந்நிலையில் ஜெயிலர் திரைப்படம் வெளியாகி மாபெரும் வெற்றியை கண்டுள்ளது. இதை தொடர்ந்து தளபதி விஜய் இயக்குனர் நெல்சன் அவர்களுக்கு கால் செய்த ஜெயிலர் திரைப்படம் மிக சிறப்பாக உள்ளது என வாழ்த்துக்கள் தெரிவித்ததாக கூறப்படுகிறது.

அது மட்டுமன்றி தளபதி விஜய் நெல்சனுடன் சேர்ந்து  மறுபடியும்  நடிக்க உள்ளதாகவும்  தகவல்கள் இணையத்தில் பரவி வருகின்றன. இறுப்பினும் இது குறித்து எந்த அதிகாரபூர்வ தகவல்களும் வெளியாகத நிலையில் இந்த தகவல்கள் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது எனலாம் ………..