தென்னிந்தியசினிமாவில் இன்றைக்கு ஏராளமான இளம் நடிகர்கள் புதிதாக வந்த வண்ணம் இருப்பதோடு நடிக்கும் ஒரு சில படங்களிலேயே வெகுவாக பல ரசிகர்களின் மனதை கொள்ளை கொண்டு தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்கின்றனர். இருப்பினும் அந்த காலத்தில் இருந்து நடித்து வரும்  முன்னணி நடிகர்கள் பலரும் இன்றைக்கு அவ்வளவாக சினிமாவை விட்டு விலகி வரும் நிலையில் இதில் ஒரு சில நடிகர்கள் தொடர்ந்து படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர் . இந்நிலையில்

திரையுலகில் வில்லனாக தனது திரைபயணத்தை தொடங்கியதை அடுத்து ஹீரோவாக பல படங்களில் நடித்துள்ள நிலையில் தற்போது வில்லன், குணச்சித்திரம், செண்டிமெண்ட் என பல மாறுபட்ட கேரக்டரில் நடித்து பலரையும் தனது நடிப்பால் வியக்க வைத்து வருபவர் பிரபல முன்னணி நடிகர் சத்யராஜ். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார்.

இந்நிலையில் சமீபத்தில் நடிகர் சத்யராஜ் அவர்களின் வீட்டில் துயர சம்பவம் ஒன்று நடந்துள்ளதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள்  மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. அந்த வகையில் சத்யராஜின் தாயாரான நாதாம்பாள் கடந்த சில வருடங்களாக உடல் நலக்குறைவு காரணமாக இருந்து வந்த நிலையில் இன்று

காலை அவரது உடல் நிலை மிகவும்  மோசமான நிலையில் அவர் காலமானார். மேலும் அவருக்கு 94  வயதாகும் நிலையில் அவரது இந்த பிரிவு குடும்பத்தாரை பெருத்த துயரத்தை ஏற்படுத்தியுள்ளது. இதனைதொடர்ந்து முன்னணி திரை பிரபலங்கள் பலரும் நேரில் சென்று அஞ்சலி செலுத்தி வருகின்றனர்………………….