தென்னந்திய அளவில் கடந்த சில மாதங்களாக தொடர்ந்து பல மாறுபட்ட கதைகளை கொண்ட பான் இந்தியா திரைப்படங்கள் வெளியாகி மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வருகிறது. இப்படி ஒரு நிலையில் கடந்த சில வருடங்களுக்கு தெலுங்கு திரையுலகில் பிரபல இயக்குனர் ராஜாமவுலி இயக்கத்தில் வெளியாகி மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படம் பாகுபலி . இந்த படத்தில் ஹீரோவாக நடித்து உலகளவில் தன்னை பிரபலபடுத்தி கொண்டவர் பிரபல  முன்னணி நடிகர் பிரபாஸ். இவர் இதற்கு முன்னரே பல படங்களில் நடித்திருந்த பொதிலும் இவருக்கு

தனி அடையாளத்தை ஏற்படுத்தி கொடுத்தது என்னமோ இந்த படம் எனலாம் . இந்த படத்தை தொடர்ந்து பிரபாஸ் அடுத்தடுத்து பல பிரமாண்ட படங்களில் நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இவரது நடிப்பில் ராமாயணத்தை மையமாக கொண்டு ஆதிபுருஸ் திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி வேற லெவலில் வசூல் சாதனையை படைத்திருந்தது. இந்த படங்களின் வெற்றியை அடுத்து தொடர்ந்து பல முன்னணி இயக்குனர்களின் படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் அடுத்த படமாக சலார் படத்தில் நடித்து வருகிறார் .

இப்படத்தின் படபிடிப்பு வேலைகள் மும்முரமாக நடந்து வரும் நிலையில் இன்னும் சில மாதங்களில் படம் வெளியாகவுள்ளதாக படக்குழு அறிவித்துள்ளனர். இது ஒருபக்கம் இருக்க சமீபத்தில் பிரபாஸ் அவர்களின் புகைப்படம் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி உள்ளது. காரணம் அந்த புகைப்படத்தில் பிரபாஸ் தலையில் முடி இல்லாமல் வழுக்கையாக உள்ளார் இதை பார்த்த பலரும் அவருக்கு என்ன ஆச்சு

என்பது போலன பல கேள்விகளை எழுப்பி வருகின்றனர் . இதையடுத்து இது குறித்து விசாரிக்கையில் அந்த புகைப்படம் முற்றிலும் பொய்யானது அது பிரபாஸ்  அவர்களின் ஹெட்டர்ஸ் உருவாக்கிய போட்டோஷாப் என தெரிய வந்துள்ளது . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………..