சினிமாவில் இன்றைக்கு படங்களில் அதிகளவில் பல இளம் நடிகைகள் நடித்து வரும் நிலையில் அந்த காலத்தில் படங்களில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக நடித்த பல முன்னணி நடிகைகளுக்கு அவ்வளவாக வாய்ப்புகள் வராததை அடுத்து பலரும் சினிமாவை விட்டு விலகி இருக்கும் இடமே தெரியாமல் இருந்து வருகின்றனர். இருப்பினும் இதில் ஒரு சில நடிகைகள் தொடர்ந்து படங்களில் கிடைக்கும் கதாபாத்திரங்களை ஏற்று நடித்து வருகின்றனர் அப்படி ஒரு நிலையில் 90-களின் காலகட்டத்தில் பல முன்னணி நடிகர்களுடன் ஜோடியாக நடித்து தனது வசீகரமான தோற்றம் மற்றும் நடிப்பால் பலரது கனவு கன்னியாக வலம் வந்தவர்

பிரபல முன்னணி நடிகை சுகன்யா. இதையடுத்து தொடர்ந்து படங்களில் நடித்து வந்த  நிலையில் ஒரு கட்டத்துக்கு மேல் அவ்வளவாக படங்களில்ஹீரோயினாக வராத நிலையில் கடந்த சில வருடங்களுக்கு முன்னர் ஸ்ரீ தரன் என்பவரை திருமணம் செய்து அமெரிக்காவில் சென்று செட்டில் ஆகி விட்டார் . இருப்பினும் சில காலமே நீடித்த இவரது திருமண வாழ்க்கை சில கருத்து வேறுபாடுகள் காரணமாக விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். இந்நிலையில் மீண்டும் சினிமாவில் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக பல முன்னணி நடிகர்களின் படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இதனைதொடர்ந்து தனிமையில் இருந்து வரும்

சுகன்யா தற்போது ஐம்பது வயதாகும் நிலையில் இரண்டாவது திருமணம் செய்து கொள்ள இருப்பதாக பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி வருகிறது. இது குறித்து விளக்கம் கேட்டபோது சமீபத்தில் பேட்டி ஒன்றில் கலந்து கொண்ட சுகன்யா பேசுகையில், கல்யாணம் குறித்து கேட்டபோது எனக்கு தற்போதைக்கு அப்படி ஒரு எண்ணம் இல்லை அதோடு எனக்கு இப்போது வயது ஐம்பது ஆகிறது இப்போது எனக்கு கல்யாணம் ஆகி

குழந்தை பிறந்தால் அந்த குழந்தை என்னை அம்மா என்று அழைக்காது பாட்டி  என்று தான் அழைக்கும் மேலும் நான் மறுமணம் வேண்டும் என்று சொல்லவில்லை வேண்டாம் என்றும் சொல்லவில்லை என நைசாக கூறி தப்பித்து கொண்டார். இதையடுத்து இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது…………………….