தென்னிந்திய திரையுலகில் கடந்த சில வருடங்களாக போதாத காலமாக இருந்து  வருவதோடு இதன் காரணமாக பல முன்னணி திரை பிரபலங்களும் எதாவது ஒரு வகையில் பாதிக்கபட்டு காலமாகி வரும் நிகழ்வு தொடர்ந்து அரங்கேறி வரும் நிலையில் தற்போது தமிழ் சினிமாவில் முன்னணி காமெடி நடிகர்களில் ஒருவராக வலம் வரும் பிரபல முன்னணி நடிகரான வைகைபுயல் வடிவேலு அவர்களின் வீட்டில் அரங்கேறியுள்ள சோக நிகழ்வு அவரது குடும்பத்தாரை மட்டுமின்றி ஒட்டு மொத்த திரையுலகினரையும் மீளாதுயரத்திற்கு கொண்டு சேர்த்துள்ளது . இந்நிலையில்

வடிவேலு அவர்கள் கடந்த சில வருடங்களாக திரையுலகில் எந்த படங்களிலும் நடிக்காமல் இருந்து வந்த நிலையில் மீண்டும் ரீன்ட்ரி கொடுக்கும் விதமாக கடந்த சில மாதங்களுக்கு முன்னர் நாய் சேகர் படத்தில் ஹீரோவாக நடித்திருந்தார். இந்த படத்தை தொடர்ந்து அடுத்தடுத்து பல படங்களில் கமிட்டாகி பிசியாக நடித்து வரும் நிலையில் சமீபத்தில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் உதயநிதி ஸ்டாலின் நடிப்பில் வெளியாகி மக்கள் மத்தியில் மாபெரும் வெற்றிபெற்ற

மாமன்னன் படத்தில் முற்றிலும் மாறுபட்ட கதாபாத்திரத்தில் நடித்து பலரையும் வியக்க செய்திருந்தார். இவ்வாறு பிரபலமாக பல படங்களில் நடித்து வரும் நிலையில் வடிவேலு அவர்களின் தமபியான ஜெகதீஸ்வரன் காலமாகி போனதாக தகவல்கள் வெளியாகி பலரையும் உறைய செய்து வருகிறார். இதையடுத்து பார்ப்பதற்கு அப்படியே வடிவேலுவை உரித்து வைத்தாற்போல்

இருக்கும் அவரது தமபிக்கு 52 வயதாகும் நிலையில் எதிர்பாரதவிதமாக உடல்நல குறைவு ஏற்பட்டதை அடுத்து அவரை மருத்துவமனையில் அனுமதித்த நிலையில் அங்கு அவர் சிகிச்சை பலனின்றி காலமாகி உள்ளார். இந்நிலையில் இந்த தகவல்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து திரையுலக பிரபலங்கள் பலரும் அவருக்கு இரங்கல்களை தெரிவித்து வருகின்றனர்………………..