பொதுவாக திரையுலகில் பொருத்தவரை நடிகர் நடிகைகளுக்கு இடையே காதல் , திருமணம் என்பது எல்லாம் மேலை நாட்டு வழக்கத்தை மீறியதாக இருந்து வருகிறது எனலாம் . இந்நிலையில் பலரும் திருமணம் செய்து கொண்ட சில மாதங்களிலேயே விவாகரத்து செய்த மறுகணமே அடுத்த கல்யாணத்துக்கு தயாராகி விடுகின்றனர் இது தற்போது வழக்கமான ஒன்றாக இருந்து வரும் நிலையில் உள்ளது எனலாம். இப்படி இருக்கையில் பிரபல முன்னணி நடிகை ஊர்வசி தான் தனது 40 வயதில் இரண்டாவது திருமணம் செய்து கொண்டதற்கான காரணம் குறித்து

வெளிப்படையாக கூறியுள்ளார் . இதையடுத்து நடிகை ஊர்வசி தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்துள்ளதோடு தற்போதும் பல படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து அசத்தி வருகிறார். இவ்வாறு பிரபலமாக இருக்கும் நிலையில் ஊர்வசி கடந்த சில வருடங்களுக்கு முன்னர் பிரபல நடிகர் மனோஜ் கே ஜெயனை காதலித்து திருமணம் செய்து கொண்டார் இருப்பினும் இவர்களது திருமண வாழ்க்கை சில காலமே நீடித்த நிலையில் விவாகரத்து பெற்று பிரிந்து விட்டனர். மேலும் எனது

விவாகரத்திற்கு அவரது குடும்பம் தான் காரணம் எனவும் அவர்கள் என்னை குடிக்கு அடிமையாகி விட்டார்கள் எனவும் கூறியுள்ளார். மேலும் எனது குடியை ஒற்று காரணமாக காட்டி எனது மகளை என்னிடம் இருந்து பிரித்து விட்டார்கள் . அந்த சூழ்நிலையில் நான் மிகுந்த மன அழுத்தத்தில் அப்போது எனது நெருங்கிய நண்பரான சிவபிரசாத் அவர்கள் உறுதுணையாக இருந்ததை அடுத்து அவரை நான் எனது நாற்பது வயதில் இரண்டாவதாக திருமணம் செய்து

கொண்டேன் . அப்போது பலரும் இந்த வயதில் மறுமணமா என கேள்வி எழுப்பினர் இருப்பினும் எதையும் நான் காதில் வாங்கிக்கொள்ளவில்லை. மேலும் எங்களுக்கு திருமணமாகி மகன் ஒருவரும் உள்ளார் . நாங்கள் தற்போது மிகவும் சந்தோசமாக வாழ்ந்து வருவதாக கூறியுள்ளார் இந்நிலையில் இந்த தகவல்கள் தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் வைரளாகி வருகிறது………………..