இன்றைய சினிமாவில் படங்களில் பெரும்பாலும் ஹீரோயினாக இளம் நடிகைகளே அதிகளவில் நடித்து வருகின்றனர் இதன் காரணமாக பல முன்னணி நடிகைகளுக்கும் படங்களில் அவ்வளவாக ஹீரோயினாக நடிக்கும் வாய்ப்புகள் வராத நிலையில் பலரும் இருக்கும் இடமே தெரியாமல் போய் வரும் நிலையில் ஏறக்குறைய இருபது வருடங்களுக்கு மேலாக தொடர்ந்து தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் முன்னணி நடிகர்கள் பலருடன் ஜோடியாக நடித்து இன்றைக்கும் பல இளசுகளின் கனவு கன்னியாக வலம்

வருபவர் பிரபல முன்னணி நடிகை த்ரிஷா . இந்நிலையில் சமீபத்தில் பிரபல இயக்குனர் மணிரத்தனம் இயக்கத்தில் வெளியாகி உலகளவில் மாபெரும் வெற்றிபெற்ற திரைப்படமான பொன்னியின் செல்வன் படத்தில் குந்தவை கதாபத்திரத்தில் வேற லெவலில் நடித்து அசத்தி இருந்தார் .. இந்த படத்தின் வெற்றியை தொடர்ந்து அடுத்ததாக லோகேஷ் இயக்கத்தில் தளபதி விஜயின் நடிப்பில் உருவாகி வரும் லியோ படத்தில் நடித்து வருகிறார் .

மேலும் தல அஜித் அவர்கள் நடிக்க இருப்பதாக கூறப்படும் விடா முயற்சி படத்திலும் ஹீரோயினாக நடிக்க இருப்பதாக பல தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இப்படி ஒரு நிலையில் நடிகை த்ரிஷா குறித்த சர்ச்சையான தகவல் ஒன்று சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் வைரளாகி வருகிறது. அந்த வகையில் பிரபல விமர்சகரும் பத்திரிக்கையாளருமான செய்யாறு பாலு

அவர்கள் நேர்காணல் ஒன்றில் பேசும் போது, த்ரிஷா குடிக்கு பெரிதும் அடிமையானவர் அவரால் குடிக்காமல் இருக்கவே முடியாது அதோடு பிரபல நடிகர் ஒருவரின் படபிடிப்பில் சூட்டிங் ஸ்பாட்டுக்கு மது வாங்கி வந்து ஊத்தி எல்லோர் முன்னிலையிலும் ஊற்றி குடித்ததாக கூறியுள்ளார். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் வீடியோ தற்போது இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………………..