தமிழ் சினிமாவில் தற்போது பல இளம் நடிகர்களும் ஹீரோவாக அறிமுகமாகி மக்கள் மத்தியில் தங்களது தேர்ந்த நடிப்பின் மூலமாக பலரையும் வெகுவாக கவர்ந்து தங்களுக்கென தனி ஒரு அடையாளத்தை ஏற்படுத்தி கொள்வதோடு பிரபலத்தையும் ஏற்படுத்தி கொள்கின்றனர். இப்படி ஒரு நிலையில் ஆந்திராவை பூர்விகமாக கொண்டு தமிழில் ஹீரோவாக அறிமுகமாகி இன்றைக்கு தென்னிந்திய அளவில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர் பிரபல முன்னணி நடிகர் விஷால் .

இந்நிலையில் தொடர்ந்து பல படங்களில் நடித்து வருவதோடு நடிகர் சங்க பொறுப்பிலும் இருந்து வருகிறார். இதையடுத்து தற்போது கைவசம் பல படங்களில் பிசியாக நடித்து வரும் நிலையில் எஸ் ஜே சூர்யா வில்லனாக நடிக்க விஷால் நடிப்பில் மார்க் ஆண்டனி தயாராக உள்ளதை அடுத்து இந்த படம் செப் 15  திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இந்த படத்தை அடுத்து விஷால் அடுத்ததாக தனது 34 வது படத்தை பிரபல இயக்குனர் ஹரியுடன் நடிக்கவுள்ளதை

அடுத்து அந்த படத்திற்கான படபிடிப்பு வேலைகள்  மும்முரமாக நடந்து வருகிறது . இந்நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்னர் தனது பிறந்தநாளை கொண்டாடியுள்ளார் இதனைதொடர்ந்து நடிகர் விஷால் தனது அப்பா மற்றும் அம்மாவுடன் ஒன்றாக இருக்கும் படியான புகைப்படத்தை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டுள்ளார் .

தெலுங்கு சினிமா உலகின் முன்னணி தயாரிப்பாளர்களில் ஒருவரான ஜி.கே ரெட்டி மற்றும் ஜானகி தேவி பிறந்தவர் தான் விஷால் . இந்நிலையில் அவரது தாயாரின் புகைபடத்தை பார்த்த அவரது ரசிகர்கள் பலரும் அட இவங்க தான் இவரோட அம்மாவா என வியந்து போனதோடு அவருக்கு பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்………………….