பொதுவாக பெரும்பாலும் சினிமாவில் நடிப்பவர்கள் தான் அதிகளவில் மக்கள் மத்தியில் பிரபலமாக இருப்பவர்கள் ஆனால் தற்போது அதற்கு நேர்மாறாக சினிமாவில் நடிப்பவர்களை காட்டிலும் சோசியல் மீடியாவில் ஆக்டிவாக இருப்பவர்கள் தான் பிரபலமாக இருக்கிறார்கள் . இப்படி ஒரு நிலையில் கடந்த வருடத்தில் இணையத்தில் ஹாட் டாப்பிகாக பேசப்பட்ட நிகழ்வுகளுள் ஒன்று தயாரிப்பாளர் லிப்ரா ரவி எனும் ரவீந்தர் மற்றும் சீரியல் நடிகை மகாலட்சுமியின்

திருமணம் தான். காரணம் மகாலட்சுமி ஏற்கனவே திருமணமாகி குழந்தை ஒருவரும் உள்ளதை அடுத்து இவரை ரகசியமாக திருமணம் செய்து கொண்டார். அதன் பின்னர் இருவரும் வேற லெவலில் பிரபலமானதை அடுத்து தொடர்ந்து இருவரும் ஒன்றாக இருக்கும் புகைப்படத்தை பதிவிட்டு பலரையும் வேறுபெற்றி வந்தனர் . இதையடுத்து கடந்த சில தினங்களுக்கு முன்னர் இவர்கள் இருவரும் தங்களது திருமணம் முடிந்து ஒரு வருடம் ஆனதை கொண்டாடும் வகையில் மிக பிரமாண்டமான ஏற்பாடுகளை

செய்து வேற லெவலில் கொண்டாடி இருந்தனர் . மேலும் அதில் எடுத்துக்கொண்ட பல புகைப்படங்களை தனது இணைய பக்கத்தில் பதிவிட்டு இருந்தனர். இவ்வாறு இருக்கையில் திருமண நாளை கொண்டாடிய ஒரே வாரத்தில் ரவீந்தரை போலீசார் கைது செய்துள்ளார் . இது குறித்து விளக்கம் கேட்டபோது ரவீந்தர் திடக்கழிவுகளை ஆற்றலாக மாற்றும் திட்டம் ஒன்றை அறிமுகபடுத்தி

அதன் மூலமாக சுமார் 16 கோடி ரூபாய் மோசடி செய்திருப்பது தெரிய வந்துள்ளது. இதையடுத்து அவர் மீது வழக்கு பதிவு செய்து விசாரணைக்கு போலீசார் கைது செய்து அழைத்து சென்றுள்ளனர் இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைபடங்கள் சமீபத்தில் இணையத்தில் வெளியாகி வேற லெவலில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது……………….