சினிமாவில் பொறுத்தவரை அதில் நடிக்கும் ஹீரோக்கள் பெரும்பாலும் தங்களது ஹீரோயிசத்தை காட்டும் வகையில் இருப்பது சண்டை காட்சிகளாக தான் இருக்கும் அதை வைத்து அவர் ரசிகர்கள் மத்தியில் மாஸ் ஹீரோவாக தன்னை பிரபலபடுத்தி கொள்கிறார் . இந்நிலையில் அந்த காட்சியில்  நடிக்கும் ஹீரோவின் மாஸ் காட்சிகளை மட்டுமே பார்க்கும் நாம் அதன் பின்னால் தங்களது உடல் உயிரையும் விடுத்து பணிபுரியும் சண்டை காட்சி கலைஞர்களை

 

மறந்து விடுகிறோம் . இப்படி ஒரு நிலையில் தற்போது பல முன்னணி நடிகர்களின் படங்களில் வில்லனாக நடித்து வருவதோடு முன்னணி ஸ்டன்ட் மாஸ்டர்களில் ஒருவராக வலம் வருபவர் ஸ்டன்ட் சில்வா . இவரை தெரியாதவர்களே இல்லை எனலாம் அந்த அளவிற்கு குறுகிய காலத்திலேயே தனது திறமையான நடிப்பு மற்றும் ஸ்டன்ட் காட்சிகளால் பலரையும் தன் பக்கம் திரும்பி பார்க்க வைத்தவர். முதலில்

ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் வார்டு பாயாக தனது வாழ்க்கையை ஆரம்பித்த இவர் அதன் பின்னர் சினிமாவின் மீது கொண்ட மோகத்தால் திரையுலகில் நடனத்தின் மூலமாக நுழையலாம் என எண்ணி பின்னர் ஸ்டன்ட் கலைஞராக தனது பயணத்தை தொடங்கினர். இதையடுத்து இன்றைக்கு தமிழ், தெலுங்கு, மலையாளம் என பல மொழிப்படங்களில் ஸ்டன்ட் மாஸ்டராக இருந்து

வரும் சில்வா கடந்த சில வருடங்களுக்கு முன்னர் மங்கையர்கரசி என்பவரை திருமணம் செய்து கொண்ட நிலையில் இவர்களுக்கு அம்ரிதஹர்ஷினி எனும் மகளும் கிருஷ்ணன் எனும் மகன் ஒருவரும் உள்ளதை அடுத்து இவர்களது சமீபத்திய குடும்ப புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் அதிகளவில் பகிரப்பட்டு வருவதோடு செம வைரளாகி வருகிறது…………….