தற்போது தமிழ் திரையுலகில் மட்டுமின்றி மக்கள் பலரையும் பெருத்த சோகத்தில் ஆழ்த்தி இருப்பது பிரபல முன்னணி நடிகரான மாரிமுத்து அவர்களின் எதிர்பாரதவிதமான மறைவு குறித்து தான் . நேற்றைய நாளில் தனது தொடரின் டப்பிங் வேலையில் இருந்த நிலையில் இவருக்கு ஏற்பட்ட இந்த நிலை பலரையும் உறைய வைத்துள்ளது . மேலும் இதற்கான காரணம் என்ன என தெரியாத நிலையில் பலரும் பலவிதமான கருத்துகளை கூறி வருகின்றனர். இந்நிலையில் மாரிமுத்து அவர்கள் நடித்து வந்த சீரியல் தொடரான எதிர்நீச்சல் தொடரில் இவரது தம்பி

கதாபாத்திரத்தில் நடித்து வரும் கமலேஷ் கூறுகையில், எங்களது தொடரான எதிர்நீச்சல் தொடருக்காக அவர் டப்பிங் பேசிகொண்டிருந்த போது அவருக்கு திடீரென மூச்சு திணறல் ஏற்பட்டது இதையடுத்து அவர் உடனே அந்த அறையில் இருந்து வெளியே வந்து தனது காரை வேகமாக எடுத்துகொண்டு சென்று விட்டார் . அதன் பின்னர் என்ன ஆனது என தெரியாமல் நாங்கள் இருந்த நிலையில் அவரது மொபைலுக்கு கால் செய்தும் அவர் எடுக்கவில்லை அதன் பின்னர் அவரது மகளுக்கு தொடர்பு கொண்டபோது தான் அவர் சூர்யா மருத்துவமனையில் இருப்பது தெரிய

வந்தது . அதன் பின்னர் நாங்கள் அங்கு செல்லும் போது அவருக்கு இந்த நிலை ஏற்பட்டு இருந்தது என கண்ணீர் மல்க கூறியிருந்தார். இதையடுத்து சீரியல் இயக்குனர் திருசெல்வன் பேசும் போது , இவரது மறைவு எங்களுக்கு மிகபெரிய இழப்பு , மேலும் இன்றைக்கு அவருக்கு சூட்டிங் இல்லை டப்பிங் பேச மட்டும் வந்திருந்தார். இப்படி ஒரு நிலையில் இவருக்கு இப்படி

ஆகி விட்டது . மேலும் இது எங்களை தாண்டி ஒட்டுமொத்த திரையுலகினருக்கும் பெருத்த இழப்பு . அதோடு அவரது குடும்பத்தாருக்கு எப்படி ஆறுதல் சொல்வது என்றே தெரியவில்லை . அவர் உடல் நலம் பாதிக்கப்பட்டு இருந்தால் கூட சொல்லலாம் அவர் நன்றாகவே இருந்தார் என பேசியிருந்தார் . இந்நிலையில் இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி அவரது ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது…………..