வாழ்க்கை என்பது பல சுவாரசியங்களையும் அதிர்சிகலையும் அடங்கியது சில சமயங்களில் எதிர்பாராத நிகழ்வுகளை அரங்கேற்றும் அது நல்லதாகவும் இருக்கலாம் கெட்டதாகவும் இருக்கலாம் என்பது போல நேற்றிலிருந்து தமிழ் திரையுலகையும் சின்னதிரயையும் நீங்கா சோகத்தில் ஆழ்த்திய நிகழ்வு தான் நடிகர் மாரிமுத்து அவர்களின் இறப்பு செய்தி ஆரம்ப காலங்களில் கவிபேரரசு வைரமுத்து அவர்களின் உதவியாளராக இருந்தார் பின்னர் படங்களில் சிறு சிறு கதா பாத்திரங்களில் நடித்து வந்தார் அதன் பிறகு அன்றைய காலகட்டத்தில்

இயக்குனராக இருந்த செந்தமிழன் சீமான் அவர்களிடம் வாழ்த்துக்கள் படத்தில் உதவி இயகுனராக பணியாற்றினார் பின்பு சில படங்களை இயக்குனராகவும் துணை நடிகராகவும் தன் பயணத்தை தொடங்கினார் தமிழ் திரையுலகின் முன்னணி ஹீரோக்களான ரஜினிகாந்த் , விஜய் , அஜித், கார்த்தி , சூர்யா , விஜய்சேதுபதி, தனுஷ் ஆகியோர்களின் படத்திலும் நடித்துள்ளார் சமீபத்தில் வெளியான ஜெய்லர் திரைபடத்தில் துணை வில்லனாக நடித்து மக்கள் மனதை கவர்ந்தார் இவர் படங்களில் நடித்து மக்களை கவர்ந்ததை விட

சன் தொலைகாட்சியில் ஒளிபரப்பாகும் எதிர் நீச்சல் சீரியல் மூலம் தான் எண்ணற்ற ரசிகர்களின் மனதை கவர்ந்தார் அதிலும் இவரின் இந்தாமா ஏய் என்னும் வசனம் மக்கள் மத்தியில் மிகவும் பிரபலமடைந்து விட்டது என கூறலாம் அது போக சமீபத்தில் ஜீ தமிழ் தொலைகாட்சியில் நடந்த தமிழா தமிழா ஷோவில் பங்கேற்று தன்னுடைய அசாத்திய பேச்சின் மூலம் தன்னுடன் தர்க்கம் செய்தவர்களை வாயடைக்க செய்து விட்டார் எனவே கூறலாம்

இது ஒரு புறம் இருக்க நடிகர் மாரிமுத்து அவர்கள் கடைசியாக கலந்துகொண்டது விழா நாயகன் என்னும் படத்தின்  படபிடிப்பு தான் இப்படத்தில் தன்னுடைய  கண்ணீர் அஞ்சலி போஸ்டர் முன் அவர் எடுத்த ஒரு செல்பி தற்பொழுது இணையத்தில் வைரலாக பரவி வருகிறது தன்னுடய இறப்பை முன் கூட்டியே  கணித்தவர் என ரசிகர்கள் வருத்ததுடன் கூறிவருகின்றனர் ……