கடந்த சில வாரங்களுக்கு முன்னர் கேப்டன் விஜயகாந்த் அவர்கள்  உடல்நல குறைவால் பாதிக்கப்பட்ட நிலையில் அவரை உடனடியாக அருகில் இருந்த மியாட் தனியார் ,மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு அவருக்கு பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு வந்த நிலையில்  சில தினங்களுக்கு முன்னர் அவரது உடல்நிலை மிகவும் மோசமாக இருப்பதாகவும் அவருக்கு மேலும் பலத்த சிகிச்சை அளிக்கப்பட்டு

 

வருவதாகவும் பல தகவல்கள் இணையத்தில் வெளியாகி வந்த  நிலையில் ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் பலரும் பெருத்த சோகத்தை ஏற்படுத்தியதோடு அவர் விரைவில் நலமுடன் மீண்டு வர பிரார்த்தனைகளை செய்து வந்தனர். இப்படி ஒரு நிலையில் அவரது  உடல்நிலை குறித்து அண்மையில் அவரது மனைவி பிரேமலதா பேட்டி ஒன்றில் பேசியிருந்தார் அதில் கேப்டன் அவர்கள் உடல்நிலை

தற்போது முன்னேற்றம் பெற்று வருவதாகவும் அவர் விரைவில் மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பி விடுவார் எனவும் பொய்யான தகவல்களை எதுவும் யாரும் வெளியிட வேண்டாம் எனவும் அதில் கூறியிருந்தார். இந்நிலையில் சமீபத்தில் அவர் அனுமதித்து இருக்கும் மியாட் மருத்துவமனையில் இருந்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது . அந்த

வகையில் அதில், தேமுதிக அரசியல் பிரமுகரும் நடிகருமான கேப்டன் விஜயகாந்த் பூரணமாக குணமடைந்து விட்டதாகவும் அவர் வீடு திரும்பி விட்டதாகவும் பதிவிட்டுள்ளனர். இதையடுத்து இந்த தகவல்கள் மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியானதை அடுத்து அவரது ரசிகர்கள் மற்றும் திரையுலகினர் மத்தியில் பெரும் சந்தோசத்தை ஏற்படுத்தியுள்ளது………………..