சினிமா நட்சத்திரங்கள் பற்றிய அந்தரங்கம் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை பற்றி யூடியூப்களுக்கு பேட்டியளித்து ஓப்பனாக பேசி வரும் பயில்வான் ரங்கநாதனை எதிர்த்து பலர் புகாரளித்து வந்தனர். அப்படி இரு நடிகைகளை பற்றி பேசியதால் தன் மீது புகாரளித்திருப்பதாக பயில்வானே கூறியிருக்கிறார்.

அவர் பேசுகையில், நான் எந்த நடிகைகளை பற்றியும் இதுவரை ஆபாசமாக பேசவில்லை. அவர்கள் இன்ஸ்டாகிராமில் பதிவிடும் ஆபாச புகைப்படங்களையும் வீடியோக்களையும் பகிர்ந்து கலாச்சாரத்தையே கெடுத்து வருகின்றனர். அதை சொன்னால் ஆபாசம் பேசுகிறேன் என்று புகாரளிக்கிறார்கள் என்று பயில்வான் புலம்பி இருக்கிறார்.

சமீபத்தில் அளித்த பேட்டியில், சோனியா என்ற நடிகை சென்னையில் மசாஜ் சென்டர் நடத்தி வருகிறார் என்றும் அதை நடிகர் சிவகார்த்திகேயன் தான் திறந்து வைத்திருக்கிறார். அந்த மசாய் சென்டரில் பலான மேட்டர்கள் நடப்பதாகவும் கூறியிருந்தார் பயில்வான்.

அதன் காரணமாகத்தான் அந்த நடிகை புகார் அளித்திருக்கிறார். திவ்யா மற்றும் சோனியா என்ற இரு நடிகைகள் யாரோ ஒருவரும் தூண்டுதலின் பெயரில் தான் என் மீது புகாரளித்துள்ளார்கள் எனவும் இதற்கெல்லாம் நான் பயப்படக்கூடிய ஆள் கிடையாது எனவும் பயில்வான் தெரிவித்துள்ளார்.